பொதுமக்களின் சட்டவிரோதமாகன செயற்பாடுகள்தான் டெங்கு நோய் பரகுவதற்கு காரணமாக அமைகிறது என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் இன்று (5) வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டன. இதன்போது பொதுமக்கள் பலர் தங்களுடைய வீட்டு கழிவு நீரை மழைநீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் இட்டுள்ளனர். அத்துடன் கட்டட வேலைகளை செய்வதற்காக வடிகான்கள் மேல் கல், மண் போன்ற பொருட்களை குவித்ததன் காரணமாக அவை வடிகான்களில் அடைபட்டு தேங்கி கிடக்கின்றன.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாகத்தான் டெங்கின் தாக்கம் குறித்த பகுதியில் அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு கொடிய டெங்கு நோயிலிருந்து பாதுகாப்புப் பெற அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment