ஒன்றரை வயது சிசு உட்பட 07 பேருக்கு தொற்று உறுதி


நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா -

கொட்டகலை பகுதியில் ஒன்றரை வயது சிசு உட்பட 07 பேருக்கு தொற்று உறுதி

ஒன்றரை வயது சிசு உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்தார்

கடந்த 23 ஆம் திகதி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குற்பட்ட பகுதிகள் 06 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை 26/12/2020 மாலை வெளியாகியதிலிருந்து 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தலவாகலை கூமூட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் சிசு உட்பட 35 வயதுடையபெண் ஒருவர், 20 வயது இளைஞன் ஒருவருமாக மூவரும், தலவாகலை ஒலிரூட் தோட்டத்தில் 56 வயது ஆண் ஒருவரும், கொட்டகலை டிரைட்டன் கே.ஒ பிரிவில் 59 வயது பெண் ஒருவர், டிரைட்டன் டீ.டி பிரிவில் 20 வயது பெண் ஒருவர், டெரிகிளேயர் தோட்டத்தில் 37 வயதுடைய ஆண் ஒருவருமாக ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் , கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரப்பகுதியில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் மேற்குறிப்பிட்ட 07 தொற்றாளர்களும் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :