பாடசாலைக்கல்வியை இடைநடுவில் கைவிட்டு மீள பாடசாலைக்கு இணைப்புச்செய்யப்பட்ட 08 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.


எப்.முபாரக் -

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் பாடசாலைக்கல்வியை இடைநடுவில் கைவிட்டு மீள பாடசாலைக்கு இணைப்புச்செய்யப்பட்ட 08 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் இன்று(14) வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான கற்றல் உபகரணங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஹஸ்மி, மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சித் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :