அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளாதில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வலபனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கனரக வாகனமே கினிகத்தேனை பிட்டவல பகுதியில் 100 பள்ளத்தில் களனி ஆற்றிற்கு நீர் வழங்கும் ரம்புக்பத்ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
28/12/2020. காலை 08.30 மணியளவில் சாரதியின் கட்டுப்படை மீறி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் சாரதி மற்றும் நடத்துனருமாக இருவர் காயமுற்று நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment