கிழக்கில் 12மணிநேரத்தில் 85பேருக்கு கொரோனாதொற்று!



புத்தாண்டில் அதிர்ச்சி: 1188 தொற்றுக்கள்:6மரணங்கள்!
கல்முனையில் 803 மட்டக்களப்பில் 204 திருமலையில் 142 அம்பாறையில் 39.
வி.ரி.சகாதேவராஜா-

கிழக்கு மாகாணத்தில் 12மணிநேரத்தில் 85பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அண்மைக்கால புள்ளிவிபரங்களின்படி அதிகூடியதொகையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது .இறுதியாக கடந்த 22ஆம் திகதி பதிவான தொகை 51ஆகவிருந்தது.இதுவரை அதுவே கூடுதலாகவுமிருந்தது.

ஆனால் நேற்றையதினம் அதுவும் 12மணிநேரத்துள் பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்திருப்பது பலரையும் திகிலடையவைத்திருக்கிறது. குறிப்பாக சுகாதாரத்துறைக்கு புதியவருடம் ஒரு சவாலாகவே இருக்கப்போகின்றது.

இந்த 85என்ற தொற்றுக்களின் எண்ணிக்கையில் கூடுதலாக காத்தான்குடியில் 46தொற்றுக்களும் கல்முனை தெற்கில் 14தொற்றுக்களும் இனங்காணப்பட்டன. இந்த இரண்டு பிரதேசங்களும் முடக்கப்பட்டிருப்பதும் தெரிந்ததே.

இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

புத்தாண்டில் இச்செய்தி அதிர்ச்சியூட்டக்கூடும்.எனினும் பொதுமக்கள் மேலும் அவதானமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகிவருகின்றது. அங்கு நேற்றுவரை 1188 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதமிருந்து இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 204பேரும் கல்முனை பிராந்தியத்தில் 803பேரும் திருமலை மாவட்டத்தில் 142பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 39பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட 803 தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது.

கல்முனை தெற்கில் 185 பேரும் காத்தான்குடியில் திடீரென 66பேரும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நிலைமை மோசமாகியது.
இதுவரை சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு மற்றும் காத்தான்குடியில் 06 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

கல்முனை பிராந்தியத்தில் 804..

கல்முனைப்பிராந்தியத்தில் 804ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 763பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று306 அடுத்ததாக கல்முனை தெற்கு 185 தொற்றுக்கள் பொத்துவில் 74 அட்டாளைச்சேனை 70 சாய்ந்தமருது 36 ஆலையடிவேம்பு 31 இறக்காமம் 23 சம்மாந்துறை 17 கல்முனைவடக்கு 15 திருக்கோவில் 14 நிந்தவுர் 13 காரைதீவு 11 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பிராந்தியத்தில் 10க்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப்பிரிவு நாவிதன்வெளிப்பிரிவு .அங்கு இதுவரை ஆக 06தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர்.


கல்முனை மாநகரில் 236..
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 236 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 763பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கடுத்ததாக கல்முனை மாநகரம் 236தொற்றுகக்ளுடன் உள்ளது.

கல்முனை தெற்கில் 185பேரும் சாய்ந்தமருதில் 36பேரும் கல்முனை வடக்கில் 15பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக இவ்விதம் 185 ஆக உயர்ந்துள்ளமையால் அங்கு முடக்கச்செயற்பாடு 3வது நாளாக அமுலில்உள்ளது.

மட்டக்களப்பில் 204...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 204ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 66 பேரும் கோறளைப்பற்றில் 61 பேரும் களுவாஞ்சிக்குடியில் 21பேரும் ஏறாவூரில் 16 பேரும் மட்டக்களப்பில் 14பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

திருமலையில் 142...
திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 64பேரும் மூதூரில் 41பேரும் கிண்ணியாவில் 11பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 39பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 803பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தலில் 20ஆயிரம் பேர்.

கிழக்கில் கொரோனா காரணமாக 19714பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதமிருந்து இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 6065பேரும் கல்முனை பிராந்தியத்தில் 6179பேரும் திருமலை மாவட்டத்தில் 4303பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 3167பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24மணிநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14பேரும் கல்முனை பிராந்தியத்தில் 102பேரும் திருமலை மாவட்டத்தில் 105பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 23பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

36040பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில் 36040பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள்.
கல்முனைப்பிராந்தியத்தில் 19218 சோதனைகளும் மட்டக்களப்பில் 9710 சோதனைகளும் அம்பாறையில் 2636 சோதனைகளும் திருகோணமலையில் 4476சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 24மணித்தியாலங்களில் கல்முனைப்பிராந்தியத்தில் 635 சோதனைகளும் மட்டக்களப்பில் 1581 சோதனைகளும் அம்பாறையில் 63 சோதனைகளும் திருகோணமலையில் 219சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


08சிகிச்சை நிலையங்களில் 2423 அனுமதி

கிழக்கில் இதுவரை 06கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருந்துவந்தன. புதிதாக மட்டுமாவட்டத்தில் பெரியகல்லாறு மற்றும் திருமலை மாவட்டத்தில் குச்சவெளியிலும் இரு வைத்தியசாலைகள் சிகிச்சை நியைங்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கில் 08 கொரோனா சிகிச்சை நிலையங்களாகியுள்ளது.

கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 483கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (31.12.2020) வியாழக்கிழமை வரை 2423பேர் மேற்படி 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1929பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.11பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 794பேர் அனுமதிக்கப்பட்டு 660பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 130பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 10 கட்டில் தேவையாகவுள்ளன.

மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 32 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 88 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 59பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 75 பேரும் மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 83 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டபெரியகல்லாறு சிகிச்சை நிலையத்தில் 13பேரும் குச்சவெளி சிகிச்சை நிலையத்தில் 3பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :