கல்முனை 12ஆம் வட்டாரம் வெள்ளத்தில்: தோணா வெட்டியதால் தப்பியது!


வி.ரி.சகாதேவராஜா -

ன்று(22) பெய்த கனமழையைடுத்து கல்முனையின் பலபகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.

கல்முனை 12 ஆம் வட்டாரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் தென்பட்டது. உடனடியாக அவ்வட்டாரத்திற்கான த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமையை அவதானித்தார்.

உடனடியாக மாநகரசபை ஜேசிபி வாகனத்தை வரவழைத்து அங்குள்ள பிரதான தோணாவை வெட்ட ஏற்பாடு செய்தார். தோணா வெட்டப்பட்டதும் வெள்ளநீர் அனைத்தும் கடலுக்குள் ஓடியது.
அதனால் 12ஆம் வட்டாரத்திற்கு ஏற்படவிருந்த வெள்ளப்பாதிப்பு நீங்கியது. பொது மக்கள் உறுப்பினர் ராஜனுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :