வி.ரி.சகாதேவராஜா -
இன்று(22) பெய்த கனமழையைடுத்து கல்முனையின் பலபகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.
கல்முனை 12 ஆம் வட்டாரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் தென்பட்டது. உடனடியாக அவ்வட்டாரத்திற்கான த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமையை அவதானித்தார்.
உடனடியாக மாநகரசபை ஜேசிபி வாகனத்தை வரவழைத்து அங்குள்ள பிரதான தோணாவை வெட்ட ஏற்பாடு செய்தார். தோணா வெட்டப்பட்டதும் வெள்ளநீர் அனைத்தும் கடலுக்குள் ஓடியது.
அதனால் 12ஆம் வட்டாரத்திற்கு ஏற்படவிருந்த வெள்ளப்பாதிப்பு நீங்கியது. பொது மக்கள் உறுப்பினர் ராஜனுக்கு நன்றி தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment