1960.12.12இல் பிறந்த திரு புண்ணிநேசன் காரைதீவிலுள்ள விக்னேஸ்வரா வித்தியாயத்தில் ஆரம்பக்கல்வியையும் விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடைநிலை உயர்கல்வியையும் பெற்றார். 1988இல் ஆங்கில ஆசிரியராக முதல் நியமனம் பெற்று காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் கடமையேற்றார்.
காலி றிச்மன்ட் கல்லூரியில் சேவைமுன்பயிற்சியையும் பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சியையும் பெற்று பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக மீண்டும் இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் பணியாற்றினார்.
பின்பு காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி அட்டப்பளம் விநாயகர் வித்தியாலயம் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் பணியாற்றி காரைதீவு கண்ணகி இந்து வித்தியாயத்தில் சிலகாலம் அதிபராகப்பணியாற்றினார்.இறுதியாக தான் பயின்ற விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியராக உதவிஅதிபராகப் பணியாற்றி கடந்த 13ஆம் திகதி ஓய்வுபெற்றார். பணியாற்றியகாத்தில் மாணவரது மதிப்பையும் மக்களது நன்மதிப்பையும் பெற்ற அவர் எந்தக்கருமத்தையும் சீராக செம்மையாக நேர்த்தியாக செய்தார்.
இதனால் ஆங்கிலதினப்போட்டிகள் தமிழ்மொழித்தினப்போட்டிகள் விளையாட்டுப்போட்டிகளுக்கு செயலாளராகவிருந்து கடமையாற்றியவர். ஆங்கில ஆசிரியராக கொடிகட்டிப்பறந்தபோதிலும் ரியுசன்வகுப்பை ஒருநாளும் நடாத்த விரும்பவில்லை.
மும்மொழியிலும் தேர்ச்சிபெற்ற இவர் பெரும்பாலான மேடைகளில் நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் கிரிக்கட்வர்ணணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
காரைதீவின் பழம்பெரும் நேரு சனசமுக நிலையத்தின் தலைவராக இருந்து சமுகசேவையாற்றியதோடு இன்று அதே நிலையத்தில் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.காரைதீவு விளையாட்டுக்கழகம் கிரிக்கட் கழகமாக ஆரம்பித்தவேளையில்முதல் செயலாளராகப் பணியாற்றிய இவர் கிரிக்கட் போட்டிகளில் ஆங்கில மற்றும் தமிழ் வர்ணணைசெய்வதில் புலமையாளராக விளங்கினார்.
சிவில்பாதுகாப்புக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய இவர் ஆங்கிலஆசிரியை த.நிர்மலாதேவியை கரம்பிடித்து சஜிந் டிலுசாந்த் யதுராங்கன் ஆகிய 3 ஆண்பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறார்.கல்விச்சேவை பாடசாலை ரீதியாக ஓய்ந்தாலும் சமுகசேவை அவரை வரவேற்கிறது. நாமும் வாழ்த்துவோம்.
மும்மொழியிலும் தேர்ச்சிபெற்ற இவர் பெரும்பாலான மேடைகளில் நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் கிரிக்கட்வர்ணணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
காரைதீவின் பழம்பெரும் நேரு சனசமுக நிலையத்தின் தலைவராக இருந்து சமுகசேவையாற்றியதோடு இன்று அதே நிலையத்தில் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.காரைதீவு விளையாட்டுக்கழகம் கிரிக்கட் கழகமாக ஆரம்பித்தவேளையில்முதல் செயலாளராகப் பணியாற்றிய இவர் கிரிக்கட் போட்டிகளில் ஆங்கில மற்றும் தமிழ் வர்ணணைசெய்வதில் புலமையாளராக விளங்கினார்.
சிவில்பாதுகாப்புக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய இவர் ஆங்கிலஆசிரியை த.நிர்மலாதேவியை கரம்பிடித்து சஜிந் டிலுசாந்த் யதுராங்கன் ஆகிய 3 ஆண்பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறார்.கல்விச்சேவை பாடசாலை ரீதியாக ஓய்ந்தாலும் சமுகசேவை அவரை வரவேற்கிறது. நாமும் வாழ்த்துவோம்.
0 comments :
Post a Comment