திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 66 கொவிட் தொற்றாளர்கள்


எப்.முபாரக் -


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 66 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அத்தியவசிய தேவை தவிர ஏனைய தேவை கருதி பிற மாவட்டங்களில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வருபவர்கள் தமது பயணங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று(23) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்ற விசேட கொவிட் கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்தற்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட மக்கள் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பதுடன் ஒன்று கூடல் உட்பட அநாவசிய பயணங்களில் இருந்து தவிர்ந்து வைரசை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :