கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் சுகுணன்.
காரைதீவு நிருபர் சகா-அக்கரைப்பற்றில் ஒன்பது மாதக்குழந்தையொன்றும் கொரோனாத் தொற்றுக்கிலக்காகியுள்ளது. அத்துடன் கல்முனைப்பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் இந்த 9மாதக்குழந்தையும் 75வயது வயோதிபரும் நேற்று இனங்காணப்பட்டிருந்தனர்.
9 மாதக்குழந்தையை சிகிச்சைக்காக கொழும்பு ஜடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் குழந்தையின் பெற்றொர்களுக்கு தொற்றில்லையென தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 501ஜத் தாண்டியுள்ள அதேவேளை மாகாணத்துள் வருகின்ற கல்முனைப்பிராந்தியத்தில் தொற்றுக்கள் 344. எனவே ஏனைய 147தொற்றுக்களும் ஏனைய 3 பிராந்தியத்துள் வருகின்றது.
கல்முனைப்பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 308பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப்பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் தனியொரு கிராமம் அதிகூடிய தொற்றுக்களைக்கொண்டது என்றால் அது 235தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம்.
அருகிலுள்ள அட்டாளைச்சேனையில் 37தொற்றுக்களாக உயர்ந்துள்ளது.சாயந்தமருது மற்றும் ஆலையடிவேம்பில் தலா 14பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 82பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 68பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 72பேரும் அட்hளைசசேனையில் 80பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது.
இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில் எவ்வித கொரோனா இறப்பும் ஏற்படவில்iயென்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment