வி.ரி.சகாதேவராஜா -
காரைதீவு இந்து மயானத்தை அழிக்கும் நோக்கில் அருகிலுள்ள தோணாவை சட்டவிரோதமாக அத்துமீறி வெட்டிய மாற்றின நபர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச் சம்பவம் (23) புதன்கிழமை இடம்பெற்றது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
காரைதீவுக்குரிய தோணா தெற்கு எல்லையிலுள்ளது. கடந்தசில நாட்களாக பெய்த கனமழையையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தை அகற்ற தவிசாளர் கி.ஜெயசிறில் உரியமுறையில் அதனை வெட்டிவிட்டகாரணத்தினால் வெள்ள அபாயம் நீங்கியது.
அதேவேளை மயானத்திற்கு அருகில் மற்றுமொரு தோணா உள்ளது. ஆனால் இதனை யாரும் வெட்டுவதில்லை.இதனை வெட்டினால் அருகிலுள்ள ஒரேயொரு மயானம் அழிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினால் அதனை வெட்டுவதில்லை.
இதுஇப்படியிருக்க தீய எண்ணத்துடன் அருகிலுள்ள நிந்தவுரிலிருந்து வந்த மாற்றினநபர் சட்டவிரோதமாக சிலருடன் சேர்ந்து தோணாவை வெட்டியுள்ளார். இதனைக் கண்ணுற்ற காரைதீவு மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பதட்டம் நிலவியது.
இதனையறிந்த தவிசாளர் கி.ஜெயசிறில் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்தது பார்த்ததும் நிலைமை இனமுறுகல் நிலைக்கு மாறியது. அவர் உடனே காரைதீவு பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி எஸ்.தனோஜனுக்கு அறிவித்ததுடன் 119க்கும் அறிவித்தார்.
சற்றுநேரத்தில் அவர்களும் வந்தனர். சம்பந்தப்பட்ட மாற்றின நபரை மக்களிடமிருந்து விடுவித்து கைது செய்து சம்மாந்துறைப்பொலிசில் சேர்த்தனர்.பதட்டம் தணிந்தது.
0 comments :
Post a Comment