ஜம்இய்யத்துல் உலமா சபையினரால் மாளிகைக்காட்டில் ஆத்மீக விழிப்புணர்வு நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த கொவிட்-19 ஆத்மீக விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை புதன்கிழமை (30) மாலை மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எம். சலீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு மாளிகைக்காடு பிரதேசம் முழுவதிலும் நடைபெற்றது.

ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஆத்மீக சொற்பொழிவை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாபா ரஷாதி, மாவடிப்பள்ளி அஸ்-ஸஹ்தி அரபுக்கல்லூரி முதல்வர் மெளலவி யூ. எல்.எம். முபாறக் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்த விழிப்புணர்பு பிரச்சார நடவடிக்கையில் மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை உலமாக்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகவும் வர்த்தகநிலையங்களிலும் விநியோகித்தனர். இதனை தொடர்ந்து சுனாமி வீட்டுத்திட்டமான பொலிவேரியன் கிராமத்திலும் இவ்விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :