வரவு – செலவுத் திட்ட, கல்வி அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவற்றைச் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
கண்டி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் குறிப்பாக தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகள் பலவற்றிலும் குறிப்பாக ஆளணிப் பற்றாக்குறைகள், பௌதிக வளம் மற்றும் கட்டடத் தேவைகள் என்பன உட்பட ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மடவளை மதீனா தேசிய பாடசாலை, கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலை உட்பட பல பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக எதுவித புதிய கட்டட நிர்மாண வசதிகளும் செய்து கொடுக்கப்;படாத நிலையில் அந்த தேசியப் பாடசாலைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, கம்பளை சாஹிரா தேசியப் பாடசாலையில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவின் விளைவாக பாவனைக்கு உதவாத கட்டடங்கள் அகற்றப்பட வேண்டிய நிர்பந்தம் காணப்படுகின்றது. அவற்றிற்கு புறம்பாக புதிய கட்டடங்கள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆண்டியாகடவத்தை முஸ்லிம் பாடசாலையும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டு கட்டடமொன்று இல்லாது போன நிலையில் தற்காலிகமான கட்டடமொன்றை பாடசாலை நலன் விரும்பிகள் சேர்ந்து அமைத்துக் கொடுத்திருக்கின்ற நிலவரம் நிலவுகின்றது.
இவ்வாறே, கல்ஹின்ன தேசிய பாடசாலை, அக்குரணை சாஹிரா பாடசாலை, அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரி போன்ற பல பாடசாலைகளில் சில தசாப்தங்களாகவே புதிய கட்டடங்கள் எவையும் நிர்மாணித்துக் கொடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அத்துடன் இப்பாடசாலைகளில் சில பாட விதானங்களுக்குரிய ஆசிரிய குறைப்பாடுகளும் இருக்கின்றன என்பதை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
0 comments :
Post a Comment