இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச ஆணையாளர் வைத்திய கலாநிதி R.ஸ்ரீதர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது கிழக்கு மாகாண சுதேச வைத்திய அபிவிருத்தி மற்றும் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் , வைத்தியசாலையையும் பார்வையிட்டு அதன் நிறைகுறைகளைக் மாகாண ஆணையாளரிடம் கேட்டறிந்துகொண்டார் . இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் , விசேட ஔடதம் ஒன்றினை அனைத்து பௌத்த விகாரைகளுக்கும் எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்றிற்காக திருகோணமலைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார் .
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ளதா என 37 தேசிய ஔடதங்கள் தொடர்பில் பரிசோதனைகள் நடைபெற்று வரும் இந்நிலையில் , அனைத்து ஊடகங்களும் ஒரு தயாரிப்பிற்கு மாத்திரம் கவனத்தினை செலுத்தி வருகிறது.இதனை எண்னி நான் கவலை அடைவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் சுதேச வைத்திய நிலையங்களில் தயாரிக்கப்படுகின்ற மருந்து வகைகள் பல வகைகளில் நோய்களைக் குணமாக்கியிருக்கிறது . அதனை பலர் கண்டுகொள்ளாதது மேலும் வேதனையளிப்பதாகத் தெரிவித்த அவர் இன்னும் ஒரிரு நாட்களில் குறித்த பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் தாம் ஊடகங்களுக்கு வெளியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment