றிஸ்லி முஸ்தபாவின் முயற்சியால் சாய்ந்தமருதில் அபிவிருத்திப்பணிகள்!





பாட்டனார் மர்ஹூம் எம்.சி.அஹமட் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் மற்றும் தந்தையார் மையோன் முஸ்தபா முன்னாள் அமைச்சர் ஆகியோரின் வழியில், அவர்கள் விட்ட இடத்திலிருந்து றிஸ்லி முஸ்தபா அவர்கள் எடுத்துவரும் அயராத முயற்சியின் காரணமாக சாய்ந்தமருதில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

றிஸ்லி முஸ்தபா அவர்கள், நீதி அமைச்சர் அலிசப்றி அவர்களிடம் முன்வைத்த பல்வேறு கோரிக்கையின் முதற்கட்டமாக சாய்ந்தமருதின் வைத்தியசாலை வீதி பாலம், அல் ஹிலால் வித்தியாலய வீதி பாலம் மற்றும் கடற்கரை வீதியின், மாளிகைக்காடு சந்தி முதல் கல்முனை கோவில் வரையான வீதிக்கான காபட் இடுதல் போன்ற பணிககளை ஆராம்பிப்பதற்காக  கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால் முன்னேற்பாட்டு வேலைகள் இன்று 2020.12.23 ஆம் திகதி இடம்பெற்றது.

முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.சி.அஹமட் அவர்களின் முயற்சியால் அப்போது நிர்மாணிக்கப்பட்ட குறித்த பாலங்கள் றிஸ்லி முஸ்தபாவின் முயற்சியால் மீண்டும் நிர்மாணிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :