J.f.காமிலா பேகம்-
மஹர சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளுக்கும் கொவிட் என்ரிஜன் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அடுத்த வாரம் முதல் இந்த பரிசோதனைகளை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மஹர சிறைச்சாலையில் சுமார் 2800ற்கும் அதிகமான கைதிகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1382ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் பரிசோதனைகளை விரைவில் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
0 comments :
Post a Comment