மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதிகளில் நேற்றிரவு (19) மழையுடன் கூடிய கடும் காற்று வீசியதில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று குறித்த பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
பிரதான மின் கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வாழைச்சேனை மின் பாவனையாளர் பகுதியில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தடைப்பட்ட மின் இணைப்பை வாழைச்சேனை மின்சார சபையினர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment