கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா சூரங்கால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிப்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா சூரங்கால் பிரதான வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா கண்டல் காட்டிலிருந்து டிப்பல் வாகனத்தில் மணல் ஏற்றிச் செல்கின்ற போது சூரங்காலிருந்து கற்குழிக்கு செல்லும் பிரதான வீதி சேரும் சகதியும் நிறைந்த வீதியாக மாறுகின்றது.
இதனால் அரை கிலோ மீற்றருக்கு மேலாக சேர் நிறைந்ததாக இவ் பிரதான வீதி காணப்படுவதால் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியில் செல்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது மழை காலமாகையால் வீதியில் போக்குவரத்துக்கள் மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியை கிண்ணியா பிரதேச சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :