திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இன்று (27) காலை தொடக்கம் தற்போது வரை பெய்த கடும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் நீர் உட்சென்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீதியோரங்கள் வெள்ளக்காட்சிகளாகவும் காணப்படுவதனையும் அவதானிக்க முடிகிறது.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நகர்ப் பிரதேசங்களை அண்டிய வரோதய நகர், புதுக்குடியிருப்பு, அன்புவெளிபுரம், அபயபுரம் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளது
கிண்ணியா,முள்ளிப்பொத்தானை ஜாமியா வீதியில் மழை நீர் வீட்டுக்குள் உட்புகுந்துள்ளதுடன் வடிகான்களில் நீர் நிரம்பி வழிவதனையும் காணக்கூடியதாகவுள்ளதுடன் அப்பகுதியில் வெள்ள நிலைமை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது . பல பிரதேசங்களிலும் இந்த நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment