தெ.கி.ப.கழகத்தில் முதலாவது 'இலங்கை தொழில்நுட்பவியல்;; இதழ்'எனும் இதழியல் தொழில்நுட்பவியல் பீடத்தில் அங்குரார்ப்பணம்.




சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் ஏற்பாட்டில் ' இலங்கை தொழில்நுட்பவியல்; இதழ்' எனும் முதலாவது இதழியல் (Sri Lanka Journal of Technology) வெளியிட்டு விழா தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் (31) பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்றது..

இவ்விழாவில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இவ் இதழியலானது சர்வதேச மட்டத்திலுள்ள ஆராச்சியாளர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆறு மாதத்திற்கு ஓரு முறை வெளியிடப்படும் என பீடாதிபதி கலாநிதி அப்துல் மஜீட தெரிவித்தார்.

இதில் பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.றிபாய்தீன், கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி எம்.எம்.மஸ்றுபா உட்பட தொழில்நுட்பவியல் பீடத்தின் உதவிப் பதிவாளர் டி.எல்.டபிள்யூ.எம்.அனுரங்கி மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு சுகாதார துறையினரின் சட்ட திட்டங்களுக்கமைவாக இவ்நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :