நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
ஹட்டன் டிக்கோய நகரசபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேசசபை தலைவர் கதிர்செல்வன் கடந்த 17.18.19 ஆம் திகதிகளில் கண்டி ,கொட்டகலை மற்றும் தலவாகலையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை சுயதனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
இந் நிலையில் தொற்றாளரான பிரதேசசபை தலைவர் கலந்துகொண்ட அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்ட ஏனையேரை அடையாளம் கண்டு சுயதனிமை படுத்தி அவர்களுக்கு பிசி.ஆர் பரிசோதனை மேற்கொண்டத்தில் 24/12/2020 வெளியான அறிக்கையிலே
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்
சசி ரத்நாயக்கவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
.
தொற்றுக்குள்ளான உறுப்பினரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச்செல்வதற்கான
நடவடிகையை ஹட்டன் டிக்கோயா பொதுசுகாதார பரிசோதகர்கள்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
0 comments :
Post a Comment