அட்டன் டிக்கோயா நகரசபை உறுப்பிருக்கு தொற்று உறுதி


நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

ட்டன் டிக்கோய நகரசபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேசசபை தலைவர் கதிர்செல்வன் கடந்த 17.18.19 ஆம் திகதிகளில் கண்டி ,கொட்டகலை மற்றும் தலவாகலையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை சுயதனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

இந் நிலையில் தொற்றாளரான பிரதேசசபை தலைவர் கலந்துகொண்ட அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்ட ஏனையேரை அடையாளம் கண்டு சுயதனிமை படுத்தி அவர்களுக்கு பிசி.ஆர் பரிசோதனை மேற்கொண்டத்தில் 24/12/2020 வெளியான அறிக்கையிலே
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்
சசி ரத்நாயக்கவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
.
தொற்றுக்குள்ளான உறுப்பினரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச்செல்வதற்கான
நடவடிகையை ஹட்டன் டிக்கோயா பொதுசுகாதார பரிசோதகர்கள்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :