செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த விஷயத்தில் முறையான நீதி விசாரணை வேண்டும்!நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்!!

செ
ங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த விஷயத்தில் முறையான நீதி விசாரணை வேண்டும் என நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநிலத் தலைவி பாத்திமா ஆலிமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுங்குன்றம், ஆணை பாக்கத்தில் குறவர் இன ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.பெண்கள் கடத்தப்படுவதும் , பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்துள்ள இந்த சூழலில் இவர்களுடைய மரணம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அவர்கள் உயிரிழப்புக்குரிய உண்மை காரணங்களை கண்டறிந்து குற்றம் நிகழ்ந்திருப்பின் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதுடன் கடும் தண்டனை வழங்கவும், பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :