ஓட்டமாவடியில் உடலங்களை அடக்கம் அடக்கம் செய்யுங்கள்!



ஹாறூன் (ஸஹ்வி)-
ஸ்லாமியர்களின் இறந்த உடலங்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தை தேர்வு செய்யுமாறு கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது உண்மையாக இருக்குமாயின் எமது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மஜ்மா நகர் எனும் பிரதேசத்தில் முஸ்லிம் பொது மையவாடிக்காக ஒதுக்கப்பட்ட சுமார் பத்து ஏக்கர் காணி உள்ளது.
அதில் அடக்கம் செய்வதில் எமது பிரதேச மக்கள் எவருக்கும் எதுவித ஆட்சேபணையுமில்லை.  நிலத்தடி நீர் சுமார் 30 அடி ஆழத்தில் உள்ள, குடியிருப்புக்கள் இல்லாத, கொழும்பு மட்டக்களப்புக்கான பிரதான வீதியில் இருந்து மிக நெருக்கமாகவே இவ்விடம் உள்ளது.
நிருவாக ரீதியாகவோ அல்லது தனி நபர் குடியிருப்பின் ஊடாகவோ மாற்று சயமயத்தவர்கள் சம்மந்தப்படாத குறித்த இடத்தை பயன்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடுவதற்கு ஆளணி தேவைப்படுமானால் அதற்கும் நாம் தயாராக உள்ளோம். ஜனாஷாக்களை எடுத்துச் செல்வதற்கான வாகண வசதியும் நம்மிடம் உண்டு.
இலங்கையை நாம் ஆளக் கேட்கவில்லை. இலங்கையில் வாழவும், இலங்கை பிரஜையாக வாழ்ந்து மாழ்ந்த பின்னர் எமது சமய முறைப்படி அடக்கம் செய்யவுமே அனுமதி கேட்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :