கேஸ் சிலிண்டர் தொடர் விலை
உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் மஹ்முதா ரினோஷா ஆலிமா தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைதலைவர் நூர் நிஷா, மாவட்ட செயலாளர் செய்யதலி பாத்திமா, செயற்குழு உறுப்பினர் நூருல் அஜீஷா உள்ளிட்ட நூற்றுகணக்கான பெண்கள்
கலந்து கொண்டனர்.
கடந்த சில
நாட்களில் மட்டும் 100 ரூபாய் விலை அதிகமாகியுள்ளதை கண்டித்தும்,
மத்திய அரசு சமையல் எரிவாய்வு விலையை கட்டுப்படுத்த கோரியும் , விலை உயர்வை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
0 comments :
Post a Comment