கல்முனை செய்லான் வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனத்தை தொடர்ந்து பாண்டிருப்பில் பொருள் கொள்வனவு
கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையில் கல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் (28) கல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் கல்முனை செய்லான் வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி (Rest house Road) வரையில் உள்ள விதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உட்பட சகல நிறுவனங்களையும் (28) முதல் இருந்து இன்று வரை முழுமையாக சன நடமாட்டத்தை மட்டுப்படுத்தி பொது மக்களை வீடுகளிலே தங்கி இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மீண்டும் இவ் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் இவ் நிலையினை நீடிப்பதா? இல்லையா? என முடிவு எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்முனை சந்தையும் மூடப்பட்டுள்ளதால் பொது மக்கள் தங்களது பொருட் கொள்வனவுக்காக பாண்டிருப்பு பிரதான வீதியில் விற்னையில் ஈடுபடுவதையும் பொருட் கொள்வனவில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
0 comments :
Post a Comment