திருகோணமலையில் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் கைது.


எப்.முபாரக்-

திருகோணமலையில் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேரை ஞாயிற்றுக்கிழமை(13) மாலை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல், மாத்தறை, மற்றும் குச்சவெளி பகுதிகளைச் சேர்ந்த 26, 27, 45,52 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி வடலிக்குளம் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாதோர் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்ததாகவும் அவர்களிடமிருந்து சில பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்களும் மற்றும் புதையல் தோன்றுவதற்காக பயன்படுத்திய அலவாங்கு,மண்வெட்டி போன்ற இரும்பு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 6 பேரில் ஒருவர் தொல்பொருள் திணைக்களத்தில் கடமையாற்றி வருபவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களைத் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :