சென்னை குடிநீர் வாரியத்தை கண்டித்து காலி குடங்களுடன் எஸ்டிபிஐ கட்சி போராட்டம்!

செ
ன்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 63 வது வட்டத்தில் உள்ள தெருக்களில் அடிகுழாயில் தண்ணீர் விநியோகம் செய்யாததை கண்டித்தும், தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர் அகற்றப்படாததை கண்டித்தும்
ஜிபி ரோடு மற்றும் தாயர் சாகிப் தெரு சந்திப்பில்
63 வது வட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் சலீம் ஜாபர் தலைமை தாங்கினார். தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திரண்டு,
சென்னை குடிநீர் வாரியத்தின் பெயரை மாற்றி "செயல்படாத (சென்னை) குடிநீர் வாரியம்" என அறிவிக்கக்கோரி கோஷமிட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த உதவி பொறியாளர் பாண்டியன், இன்னும் 10 நாட்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனையை சரிசெய்து தறுவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :