எப்.முபாரக்-
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த சுமண பண்டார (54 வயது) என்பவரே மேற்படி மரணமடைந்தவராவார்.
இன்று(20) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் தனது பணியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி தாதி உத்தியோகத்தராக கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது..
0 comments :
Post a Comment