பஸ்- முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து - 02 வயது குழந்தை உட்பட மூவர் காயம்



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ட்டன் பொகவந்தலா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் காயமுற்று டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அட்டனிலிருந்து மஸ்கெலியா பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸில் 01/01/2021 காலை 10.30 மணியளவில் டிக்கோயா பகுதியில் மோதுண்டுள்ளது,

முன்னால் சென்ற முச்சக்கரவண்டியொன்றை முந்திச்செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி எதிரே வந்த பஸ்ஸில் நோருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது
2021 ஆண்டு புதுவருடத்தை முன்னிட்டு ஆசிர்வாத பூஜையில் கலந்து கொள்ள அட்டனிலிருந்து மஸ்கெலியா சமன் தேவாலயத்திற்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை,தாய் மற்றும் இரண்டு வயது குழந்தையுமாக மூவரே காயமுற்றுள்ளனர்
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :