அட்டன் பொகவந்தலா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் காயமுற்று டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அட்டனிலிருந்து மஸ்கெலியா பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸில் 01/01/2021 காலை 10.30 மணியளவில் டிக்கோயா பகுதியில் மோதுண்டுள்ளது,
முன்னால் சென்ற முச்சக்கரவண்டியொன்றை முந்திச்செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி எதிரே வந்த பஸ்ஸில் நோருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது
2021 ஆண்டு புதுவருடத்தை முன்னிட்டு ஆசிர்வாத பூஜையில் கலந்து கொள்ள அட்டனிலிருந்து மஸ்கெலியா சமன் தேவாலயத்திற்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை,தாய் மற்றும் இரண்டு வயது குழந்தையுமாக மூவரே காயமுற்றுள்ளனர்
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்
0 comments :
Post a Comment