கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை (5) 1346 ஆகியது. புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகிவருகின்றது.
கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 264பேரும் கல்முனை பிராந்தியத்தில் 852பேரும் திருமலை மாவட்டத்தில் 173பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 34பேருமாக 1323பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
மேலும் வெளிநாடு ,மினுவாங்கொட, கந்தக்காடுகொத்தணி ,வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி இறுதியாக ஆயைடிவேம்பிலுமாக மொத்தம் 07 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் 852..
கல்முனைப்பிராந்தியத்தில் 852ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் ,இதுவரை 812பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதில் அக்கரைப்பற்று 310 தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 193 ,பொத்துவில் 76, அட்டாளைச்சேனை 73, சாய்ந்தமருது 51, ஆலையடிவேம்பு 35, இறக்காமம் 23 ,சம்மாந்துறை 21, கல்முனைவடக்கு 15 ,திருக்கோவில் 15 ,நிந்தவுர் 13 ,காரைதீவு 13, நாவிதன்வெளி 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை பிராந்தியத்தில் 10க்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப்பிரிவாகஇருந்த நாவிதன்வெளிப்பிரிவில் இறுதியாக 5பேர் இனம்காணப்பட்டதன் அடிப்படையில் , அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாக அதாவது 14ஆக மாறியுள்ளது.
கல்முனை மாநகரில் 259
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 259 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது.
கல்முனை தெற்கில் 193பேரும் சாய்ந்தமருதில் 51பேரும் ,கல்முனை வடக்கில் 15பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 8வது நாளாக அமுலில்உள்ளது.
மட்டக்களப்பில் 264...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 264ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 94 பேரும் ,கோறளைப்பற்றில் 65 பேரும், களுவாஞ்சிக்குடியில் 30பேரும், ஏறாவூரில் 15 பேரும் ,,மட்டக்களப்பில் 22பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
திருமலையில் 173...
திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 91பேரும் மூதூரில் 42பேரும், கிண்ணியாவில் 18பேரும், கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 34பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ,ஆகக்கூடிய தொற்றாளர்கள் 852பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
40869பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில் 40869பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள்.
கல்முனைப்பிராந்தியத்தில் 20388 சோதனைகளும் ,மட்டக்களப்பில் 11478 சோதனைகளும், அம்பாறையில் 3105 சோதனைகளும், திருகோணமலையில் 5898 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
08சிகிச்சை நிலையங்களில் 2650 அனுமதி
கிழக்கில் இதுவரை 06கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருந்துவந்தன. புதிதாக மட்டுமாவட்டத்தில் பெரியகல்லாறு மற்றும் திருமலை மாவட்டத்தில் குச்சவெளியிலும் இரு வைத்தியசாலைகள் சிகிச்சை நியைங்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கில் 08 கொரோனா சிகிச்சை நிலையங்களாகியுள்ளது.
கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 507கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (05.01.2021) செவ்வாய்க்கிழமை வரை 2650பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 2131பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.12பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 847பேர் அனுமதிக்கப்பட்டு 729பேர் குணமடைந்து வெளியேறியதால், தற்போது 114பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 06 கட்டில் தேவையாகவுள்ளன.
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 49 பேரும், கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 78 பேரும் ,பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 56பேரும், பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 55 பேரும் ,மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 83 பேரும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டபெரியகல்லாறு சிகிச்சை நிலையத்தில் 23பேரும் ,குச்சவெளி சிகிச்சை நிலையத்தில் 49பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
0 comments :
Post a Comment