கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் ச.புவனேந்திரன் தெரிவிப்பு
வி.ரி.சகாதேவராஜா-கல்விஅமைச்சின் திட்டத்தின்கீழ் கல்முனை வலயத்தில் நேற்று 14ஆயிரம் மாணவர்களுக்கான உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
வலயத்திலுள்ள 49 பாடசாலைகளில் தரம்1 தொடக்கம் தரம் 5வரையுள்ள 13911 மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதாக கல்முனைவலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.
மனகிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறிக்கல்வி கல்விசேவைகள் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்கஅமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கொரோனாத்தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கானது.
கூ.மொ.விற்பனை நிலையத்தினூடாக உலருணவுப்பொதிகள் பாடசாலை அதிபர்களுக்கு விநியோகிக்கபப்பட்டு இரண்டாம் கட்டமாக கல்முனை வலயத்தில் இவை நேற்று பெற்றோர்ளிடம் வழங்கிவைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment