குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1.57 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது



எப்.முபாரக்-
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1.57 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்தசம்பவம் நேற்றிரவு(22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குச்சவெளி மதுரங்குடா - செந்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனார்.
NC-VF 1909 என்ற இலக்க மோட்டார்சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரையோரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதேவேளை அவரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அவருடைய மோட்டார்சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :