திருகோணமலை மாவட்டத்தில் அன்டிஜன் பரிசோதனை மற்றும் நேற்று 16ம் திகதி கிடைக்கப்பெற்ற பீசீஆர் அறிக்கையின்படி 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

எப்.முபாரக் -

திருகோணமலை மாவட்டத்தில் அன்டிஜன் பரிசோதனை மற்றும் நேற்று சனிக்கிழமை 16ம் திகதி கிடைக்கப்பெற்ற பீசீஆர் அறிக்கையின்படி 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தொற்று விபரம் தொடர்பில் நேற்றிரவு (16) 8.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11 ஆம், 12 ஆம் திகதிகளில் பெறப்பட்ட பிசீஆர் அறிக்கையின்படி 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10ஆம் திகதி பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் படி மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கிண்ணியாவில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சனிக்கிழமை
(16ம் திகதி) 145 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவர் கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மட்கோ பகுதியை சேர்ந்த 43 வயதுடையர் எனவும் தெரியவருவதுடன்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் , மூதூர் பிரதேசத்தில் 49 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும், குறிஞ்சாங்கேணி சுகாதார பிரிவில் 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை 16ஆம் திகதி கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் மூலம் 09 பேரும்,அன்டிஜன் பரிசோதனையில் 17 பேரும் மொத்தமாக 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :