திருகோணமலையில் 18 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக வீ.பிரேமானந் தெரிவிப்பு.


எப்.முபாரக் -

திருகோணமலையில் 18 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ஜமாலியா,லவ்லேன், சிறிமாபுர பகுதிகளில் கடந்த 30 ஆம் திகதி 42 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 31ஆம் திகதி பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவருக்கும் மேலதிகமாக திருகோணமலை நகரில் ஏழு தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 3 பெண்கள் உட்பட இளைஞர் ஒருவரும் அடங்குவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் குறிப்பிட்டார்.

இதேவேளை திருகோணமலை சிறிமாபுர பகுதியில் 93 பேருக்கு இன்று (03) ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் நான்கு பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 18 புதிய தொற்றாளர்கள் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை 4.00மணி வரை இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 148 பேர் இதுவரை இனங் காணப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :