கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த கோவிட் 19 வைரசினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பாராளுமன்ற உறுப்பினரான வசந்த யாப்பா பண்டாரவுடன் கலந்து கொண்டதன் காரணமாக அமைச்சர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானார்.
இருப்பினும் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பின்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் கோவிட் 19 வைரசினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரது ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment