33 வருட அரச சேவையிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறும் எமது அன்புக்குரிய அதிபர் ஏ.எம்.எம். பாறூக்.


யாக்கூப் பஹாத்-

நிந்நவூர் இமாம் கஸ்ஸாலி மகாவித்தியாலயத்தில் 7வருடங்கள் பொறுப்பதிபராகவும் அதிபர் சேவையில் 11 வருடங்களும் 22 வருடங்கள் ஆசிரியராகவும் கடமையாற்றி இன்றுடன் தனது அரசசேவையிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்கின்றார்

இவர் நிந்தவூரில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியதோடு இறுதி வரை பாடசாலைக்காக இரவு பகல் பாராது தன்னை அர்ப்பணிப்புடன் பல சவால்களுக்கு மத்தியில் அனைத்தையும் எதிர்வு கொண்டு சிறப்பாக தன்னை ஈடுபடுத்தி சேவையாற்றிய AMM Farook sir அவர்கள் திருப்திகரமாக தனது பணியினை நிறைவேற்றிய ஒருவராவார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

இவரது காலத்தில் எமது பாடசாலை வலய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் மற்றும் தேசிய மட்டத்திலும் சிறந்த அடைவு மட்டங்களை பெற்றுக்கொண்டமை இவரது நிர்வாகத்திறனுக்கு சிறந்த சான்றாகும். உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் உதவியோடு எமது பாடசாலையை 1C பாடசாலையாக தரம் உயர்த்திய பெருமை Farook sir அவர்களையே சாரும் அதுமட்டுமல்ல இவர் நிந்தவூரில் உள்ள தரம் பெற்ற அதிபர் சங்கத்தின் தலைவருமாவார்.

இன்றுடன் ஓய்வுபெறும் AMM. Farook sir அவர்களை இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்தி பாராட்டி வழியனுப்புவதில் கஸ்ஸாலி பாடசாலை சமூகமும் பெரு மகிழ்வடைகின்றது.

இறைவன் அவர்களின் இத்தூய பணிகளை பொருந்திக் கொள்வானாக.

ஆமீன்.

அவர்களின் ஓய்வு காலம் சிறப்பானதாகவும், அமைதியானதாகவும், இறைவனின் பொருத்தம் பெற்றதாகவும் அமைவதுடன் சிறந்த தேகாரோக்கியத்துடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :