இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - மாவடிவேம்பு - சித்தாண்டியைச் சேர்ந்த திருவம்பலம் சோமலிங்கம் என்பவரே மரணமடைந்தவர்.
அறுவடைக்குத் தயாராகவிருந்த வேளாண்மையை துவம்சம் செய்த காட்டு யானையை டோச் லைட்டுடன் சத்தமிட்டுகொண்டு விரட்டிச்சென்றபோது அந்த யானை சற்றுதூரம் முன்னே ஓடிவிட்டு சடுதியாக மீளத்திரும்பி விவசாயியை மிதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் அங்கு விசாரணைகளை நடாத்தினார். டாக்டர் கே. சுகுமார் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தார். வாழைச்சேனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அறுவடைக்குத் தயாராகவிருந்த வேளாண்மையை துவம்சம் செய்த காட்டு யானையை டோச் லைட்டுடன் சத்தமிட்டுகொண்டு விரட்டிச்சென்றபோது அந்த யானை சற்றுதூரம் முன்னே ஓடிவிட்டு சடுதியாக மீளத்திரும்பி விவசாயியை மிதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் அங்கு விசாரணைகளை நடாத்தினார். டாக்டர் கே. சுகுமார் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தார். வாழைச்சேனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment