மட்டக்களப்பு - தொப்பிகல - பெரிய மீயான்கல் வயற்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 64 வயதுடைய விவசாயியொருவர் உயிரிழப்பு



எம்ஜிஏ நாஸர்-
ன்று  அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - மாவடிவேம்பு - சித்தாண்டியைச் சேர்ந்த திருவம்பலம் சோமலிங்கம் என்பவரே மரணமடைந்தவர்.
அறுவடைக்குத் தயாராகவிருந்த வேளாண்மையை துவம்சம் செய்த காட்டு யானையை டோச் லைட்டுடன் சத்தமிட்டுகொண்டு விரட்டிச்சென்றபோது அந்த யானை சற்றுதூரம் முன்னே ஓடிவிட்டு சடுதியாக மீளத்திரும்பி விவசாயியை மிதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் அங்கு விசாரணைகளை நடாத்தினார். டாக்டர் கே. சுகுமார் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தார். வாழைச்சேனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :