இலங்கையில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர் வரும் 04 ஆம் திகதி செழிப்பான நாளை வளமான தாய் நாடு எனும் கருப்பொருளில் கிண்ணியா நடுஊற்று கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் முன்றலில சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை நடுஊற்று கிராம அபிவிருத்தி சங்கம் முன்னெடுத்துள்ளதாக இவ் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பைஸர் இஸ்மாயில் தெரிவித்தார்.
அன்றைய தின நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மூக்குக் கண்ணாடியும் வழங்குதல் மற்றும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டியும் நடைபெறும் எனவும் பைஸர் இஸ்மாயில் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment