நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
2021 புதுவருட விருந்துக்கு சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தை சடமாக மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தார்
அட்டன் தோட்டத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஆறுமுகன் குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
2021 புதுவருடத்தை முன்னிட்டு சக நண்பர்களோடு மதுபான பார்ட்டிக்கு 31/12/2020 நேற்று இரவு 08 மணியளவில் வீட்டிலிருந்து சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வராதமையினால் தேடியபோதே தேயிலை மலையில் இறந்த நிலையில் கிடந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார் மேலும் மருபான பார்ட்டி முடிந்தவுடன் சகலரும் கலைந்து சென்றுவிட்டதாக பார்ட்டியில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
பார்ட்டி இடம்பெற்ற சில மீட்டர் தூரத்தில்
தேயிலை மலையில் மீட்கப்பட்ட சடலத்தை அட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டும் மரண பரிசோதனைக்குற்படுத்தப்படும் என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment