குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது.



எப்.முபாரக்-
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
குறித்த நபரை நேற்றிவு(13) கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குச்சவெளி, ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த நசீர் நஜாத் (வயது 38) என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற போதே பொலிஸாருக்கு கிடைப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 90 போதை மாத்திரைகள் மற்றும் 2 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :