இந்தியாவில் விருந்து சிற்றிதழ் சிறந்த சிற்றிழுக்கான விருதுக்கு தெரிவு.

றாசிக் நபாயிஸ், மருதமுனை-

ந்தியாவின் தமிழ் நாட்டில் 42 வருடங்களாக இலக்கியப் பணியாற்றி வரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிற்றிதழ்களுக்கான போட்டியில் கிழக்கில் இருந்து வெளிவரும் விருந்து சிற்றிதழ் சிறந்த சிற்றிதழுக்கான விருதினை பெற்றுள்ளது.

கிழக்கில் பாண்டிருப்பில் இருந்து இரு மாதங்களுக்கு ஒரு முறை முறை வெளிவருகின்றது கலை, இலக்கிய, சஞ்சிகையான விருந்து சிற்றிதழ். பல்துறைக் கலைஞர் அகரம் செ.துஜியந்தனை ஆசிரியராகவும், மூத்த கவிஞர் மு.சடாட்சரனை ஆலோசகராகவும் கொண்டு இச் சிற்றிதழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

விருந்து சிற்றிதழுக்கு அயல்நாடொன்றில் சிறந்த சிற்றிதழுக்கான விருதும், கொளரவமும் கிடைப்பது பெருமையளிப்பதாகவும், எதிர்வரும் தை 30 ஆம் திகதி தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் விருந்து ஆசிரியர் அகரம் செ.துஜியந்தன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :