சீன தூதுரகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
சீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் ஊடாக கொழும்பு உட்பட பல மாவட்டங்களையும் சேர்ந்த 2500 தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி மிப்ளால் தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இஸ்லாமிய கலாச்சார கலை நிகழ்வுகளுடன் வரவேற்பளிக்கப்பட்டு சிறுவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக இலங்கைக்கான சீன தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான தலைமையதிகாரி மற்றும் இலங்கைக்கான சீன தூதுவரின் செயலாளர் சங் ஹன்லீன்,முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் ரூமி ஆமித், பொருளாளர் ஜௌபர் ஹாஜி, பொலிஸ் உயரதிகாரிகள், உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளை வழங்கி வைத்தனர்.

இங்கு உரையாற்றிய முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி மிப்ளால், சீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக பல வேலைத்திட்டங்களை செய்து வரும் இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரக உயரதிகாரிகள் முதல்தடவையாக பொது மக்களின் நிகழ்வொன்றில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. இது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சீன தூதுவருக்கு நினைவுசின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :