ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அலுவலகப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களது பிள்ளைகளின் கல்விநடவடிக்கைக்கான கற்றல் உபகரணங்கள் இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன் , மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன்,அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ்,சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் வட கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் டி.சிறீபதி,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜே. சுகந்தினியும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment