தவிசாளர் ஆ. தவக்குமாரன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்தார்.
உடையார்கட்டு பிரதேசத்தில் அதிகளவு பாடசாலைகள் காணப்படுவதால் இப்பிரதேச மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சபையால் இப்பிரதேசத்தில் பொது நூலகம் கட்டி தரப்பட வேண்டும் என்று இவர் முன்மொழிய சக உறுப்பினர் பெர்ணாண்டோ அருள்தாஸ் இதை வழி மொழிந்தார்.
பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் சபையில் மேற்கொள்ளப்பட உள்ள நிதி ஏற்பாட்டின் மூலம் உடையார்கட்டு பிரதேசத்தில் பொதுநூலகம் அமைப்பது என்று நிறைவாக தீர்மானம் எட்டப்பட்டது.
இதே போல மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் இந்து, கிறிஸ்தவ பொது மயானங்களை அமைப்பதற்கு ஏற்றவாறான காணிகளை பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் ஒருமனதாக சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான பிரேரணையை உறுப்பினர் சிவஞானராஜ் சுவந்தினி முன்மொழிய சக உறுப்பினர் செல்வராணி அருளானந்தம் வழி மொழிந்து உள்ளார்.
0 comments :
Post a Comment