குச்சவெளியில் பேரூந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.



எப்.முபாரக்-
ஜாயா நகர் வட்டாரத்தில் சல்லிமுனை, பல்லக்குளம் ஆகிய பகுதிகளில் பேரூந்து தரிப்பிடம் அமைத்து தருமாறு குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களிடம் அவ் வட்டாரத்திற்கு பொறுப்பான உறுப்பினர் ஏ.சி.எம்.மீசான் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கினங்க பிறந்துள்ள 2021 ம் ஆண்டின் இரண்டாவது வேலைத் திட்டமாக குச்சவெளி பிரதேச சபையின் சல்லிமுனை, பல்வக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள 02 பேரூந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(2) குச்சவெளி பிரதேச சபையின் ஜாயாநகர் வட்டார உறுப்பினர் ஏ.சி.எம்.மீசான் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் இறக்ககண்டி வட்டார உறுப்பினர் எம்.ஐ.எம்.சலீம் மற்றும் நிலாவெளி வட்டார உறுப்பினர் ஜே.நிமலஹாசன் மற்றும் கும்புறுப்பிட்டி வட்டார உறுப்பினர் என்.ஜெயகாந்தன் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் சகோதரன் எம்.எஸ்.பரீஸ் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்,உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :