வாழ்வாதரமற்ற மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.

 

நூருள் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம் -

ம்மாந்துறையை தளமாக கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா லைஃப் கயர் நிறுவனதினூடாக வாழ்வாதரமற்ற சுமார் 50 சம்மாந்துறை பிரதேச மாணவர்களுக்கு அத்தியவசிய பாடசாலை உபகரணங்கள் நேற்றும், இன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

கொவிட் -19 தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் கல்வி நிலையில் பல அசெளகரீகங்களை சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் தொழிலிழப்புக்களும் பரவலாக காணப்படுகிறது.

இத் தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவ, மாணவிகள் பலர் கல்வியினை தொடர முடியா நிலையும் கோவிட் காரணமாக ஏற்பட்டன.

இதனை கருதில் கொண்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் முதற் கட்டமாக வாழ்வாதரமற்ற சுமார் 50 மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா லைஃப் கயர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டது பாடசாலை உபகரணங்களை வீடு வீடாக சென்று வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :