வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டலும், பிரியாவிடை நிகழ்வும்

எச்.எம்.எம்.பர்ஸான்-


ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு, பிரியாவிடையும் புதன்கிழமை (27) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் ஆசிரியர் ஜே.எம்.நியாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் அவர்களும் கெளரவ அதிதியாக ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி பீ.என்.அஹட் ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி சின்னம் சூட்டப்பட்டது. அத்துடன் குறித்த பாடசாலையில் சேவை புரிந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களின் சேவைகளைப் பாராட்டி நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இம்முறை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :