கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து ஏழு நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்



எப்.முபாரக்-
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று (29) ஏழு நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி சற்று முன்னர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

கடந்த மாதம் 23, 25ம் திகதிகளில் PCR பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கை தற்போது கிடைத்திருக்கிறது. இதன் பிரகாரம் 7 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் குட்டிக்கரச்சி மற்றும் இடிமன் ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளில் தலா ஒருவரும் மாஞ்சோலைச்சேனை கிராம சேவகர் பிரிவில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதேவேளை குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த இரண்டாவது கொரோனா அலைக்குப் பின்னர் இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :