கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்நாட்டுற்பத்தியை மேம்படுத்தல் தொடர்பான திருகோணமலை மாவட்ட கலந்துரையாடல் இன்று (09) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் ஒழுங்குபடுத்தலிற்கமைய நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்நாட்டுற்பத்தியை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு மற்றும் தீர்வுகள் இதன்போது அரசாங்க அதிபரினால் இதன்போது முன்வைக்கப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல் தொடர்பான அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களினால் தேசிய ரீதியாகவும் திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இதன்போது உரிய அமைச்சின் செயலாளர்களினால் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணவீர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள ,அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment