நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
மூன்று மாதங்களின் பின்னர் பொடிமெனிக்கே ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக மத்திய மாகாண புகையிர சேவை பொறுப்பதிகாரி ஆனந்த கருணாரத்ன தெரிவித்தார்.
இதற்கமைவாக 18/01 இன்றைய தினம் இரண்டு பொடிமெனிக்கே ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னரே வேறு ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளைக்கும் , பதுளையில் இருந்து கொழும்புக்குமாகவே இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரப்பிரிவினால் அறிவுறுத்தப்பட்டுள்ள கொவிட் 19 பாதுகாப்புக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே சேவையை நடத்தவதாகவும் வரும் பயணிகள் முககவசம் அணிந்து சுகாதார விதிமுறையோடு வருகைத்தருமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment