வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வியாபாரிகளுக்கு அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனை


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை முன்நூற்றி இருபத்தொரு (321) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைககளும் மற்றும் இறுநூற்றி ஆறு (206) அன்டிஜன் பரிசோதனைகள் இடம் பெற்றதில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழைச்சேனைஇ கோறளைப்பற்று மத்திஇ ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வர்த்தகர்களுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஏனைய வர்த்தகர்களையும்இ பொது மக்களையும் பாதுகாக்கும் வகையில் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான வியாபாரிகள் வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் மற்றும் வாழைச்செனை பிரதான வீதியிலுள்ள வியாபார நிலையம் என்பவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்றது.

இந்த வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகாரி டாக்டர் ரீ.ஸ்டீப் சஞ்ஜீவ்;; தலைமையில்; வியாபாரிகள் தொன்நூற்றிஆறு (96) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் நூறு (100) நபர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றது.

அத்தோடு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் வியாபாரிகள் நூறு (100) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் அறுபது (60) நபர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றது இதில் அன்டிஜன் பரிசோதனை செய்ததில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் வியாபாரிகள் நூற்றி அறுபத்தைந்து (165) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் ஆறு பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் இடம் பெற்றதில் அன்டிஜன் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்இ வைத்தியர்கள். பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள்இ பொதுச் சுகாதார பரிசோதகர்கள்இ வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடிஇ வாழைச்சேனைஇ கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறித்த செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்று இணங்காணப்பட்டுள்ளதால் மூடப்பட்ட வீதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் காணப்படுவதுடன்இ பிரதான வீதியை அன்டிய வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடிக் காணப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :